வாங்க.. வாங்க... வாங்க....

Wednesday, February 10, 2010

அவனா இவன்?!

சிறு வயதில் என் லட்சியம் எல்லாம் 'நாம் ஒரு டிரைவர்'ஆகிவிட வேண்டும் என்பதுதான்.எங்கள் ஊருக்கு முதல் நாள் பஸ் வந்த போது ஏதோ நானே சொந்தமாய் பஸ் வாங்கிவிட்ட ஒரு சந்தோசம்.எங்கும் அதே பேச்சு.வித விதமாய் ஹாரன் அடிப்பது,அனைவருமே டிரைவருக்கு  டாட்டா காட்டுவது இப்படி  டிரைவர்ஆகிவிட எனக்கு நிறைய காரணங்கள் இருந்தன.

பின் நான் ஒரு ஆசிரியன் ஆகிவிட விரும்பினேன்.என் அப்பாவிடம் டியூஷன் படிக்க நிறைய பேர் வருவார்கள்.அப்பா வீட்டில் இல்லாத போது நான்தான் சமாளிப்பேன்.சொல்லிக்கொடுப்பது,விடைத்தாள் திருத்துவது முக்கியமாக மார்க் போடுவது என்று ஒரு பத்து பேர் நம் கையில் இருக்கிறார்கள் என்பதில் ஒரு கிரக்கம்.வெளியில் பார்க்கும்போது 'வணக்கம்' வாங்குவது பெருமையாய் இருக்கும்.இதனாலேயே ஆசிரியர் ஆகிவிட விருப்பப்பட்டேன்.

டீன் ஏஜ் பருவத்தில் நிறைய டிடெக்டிவ் நாவல்கள் படிக்க நேர்ந்த போது தமிழ்வாணனின் சங்கர்லால் ,ராஜேஷ்குமாரின் விவேக்,சுபாவின் நரேந்திரன்,சுஜாதாவின் வசந்த்,பி.கே.பி.யின் பரத் போல ஒரு சி.ஐ.டி. ஆகி விட விரும்பினேன்.அவர்கள் சாகசம்,நுண்ணறிவு இவை எல்லாம் பிரமிப்பை
ஏற்படுத்தின.அப்போதெல்லாம் வீட்டில் சாதாரண விசயங்களை கூட சந்தேக கண்ணுடனேயே பார்த்து 'ட்ரைனிங்'  எடுத்தேன்.

அதன் பின் கல்லூரியில் வேதியியல் பட்டம் முடித்து கெமிக்கல் கம்பனியில் வேலைக்கு சேர்ந்து CHEMICAL LAB,ANALYSIS,REACTION என்று ஒரு போதை இருந்த போது விஞ்ஞானி ஆக விரும்பினேன். வேதியியல் பலருக்கு கடினமான பாடம் என்பதால் அதில் சாதித்து கலாம் போல 'விஞ்ஞானி' ஆகி விடலாம் என்பது எண்ணமாய் இருந்தது.

பின் ஒரு தமிழ் பற்றுள்ள சுதந்திர போராட்ட வீரரின் (திரு.தி.சு.கலியானராமன்) தொடர்பு கிடைத்த போது வேலையை எல்லாம் விட்டு விட்டு முழு நேர இலக்கிய வாதி ஆகிவிட விரும்பினேன்.அவரின் பாண்டித்யம் என்னை கிரங்க அடித்தது.

இப்படி இன்னும் ஏதோதோ விருப்பங்கள் காலத்திற்கும் மாறிக்கொண்டே இருந்தது.காலம்தான் எல்லாவற்றையும் முடிவு செய்யும் என்பது பின்னர் புரிந்தது.இன்னும் கூட வகுப்பறைகளில் ''பிற்காலத்தில் என்னவாக ஆசைபடுகிறாய்''என்று ஆசிரியர் கேட்கும் போது அன்றைய தேதியில் எது நம்மை ஆட்கொள்கிறதோ அதையே தேர்ந்தெடுத்து 'அதாக ஆசை' என்று பதிலளிகிறார்கள்.

இன்று நம்மில் எத்தனை பேர் நாம் விரும்பியதாய் இருக்கிறோம்?படிக்க விரும்பியது ஒன்றாக இருக்க கிடைத்ததை படித்து விட்டு வாழ்கையை ஒரு ஏக்கத்தோடே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டி உள்ளது.''நான் நினைத்ததை படித்தேன்,விரும்பியவளை மணந்தேன்,பிடித்த வேலை கிடைத்தது,பிடித்த ஊரில் செட்டில் ஆகி விட்டேன்'' இப்படி யாராவது சொல்ல கேட்க ஆசையாய் இருக்கிறது.

இளமுருகன்
நைஜீரியா
10.02.2010  7.30 a.m.

15 comments:

இராகவன் நைஜிரியா said...

// 'நான் நினைத்ததை படித்தேன்,விரும்பியவளை மணந்தேன்,பிடித்த வேலை கிடைத்தது,பிடித்த ஊரில் செட்டில் ஆகி விட்டேன்'' இப்படி யாராவது சொல்ல கேட்க ஆசையாய் இருக்கிறது. //

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்... பாட்டுதான் ஞாபகத்து வருது..

இராகவன் நைஜிரியா said...

// சிறு வயதில் என் லட்சியம் எல்லாம் 'நாம் ஒரு டிரைவர்'ஆகிவிட வேண்டும் என்பதுதான்.//

இப்ப மட்டும் என்ன... இந்தியாவில் இருந்த வரைக்கும் எங்க வூட்ல நான் தாங்க டிரைவரு, கண்டக்டரு, கூலி எல்லாமே..

இராகவன் நைஜிரியா said...

// பின் நான் ஒரு ஆசிரியன் ஆகிவிட விரும்பினேன். //

நல்ல வேலை நிறைய பேர் தப்பிச்சுடாங்கன்னு நினைக்கிறேன்.

இராகவன் நைஜிரியா said...

// அப்போதெல்லாம் வீட்டில் சாதாரண விசயங்களை கூட சந்தேக கண்ணுடனேயே பார்த்து 'ட்ரைனிங்' எடுத்தேன். //

கல்யாணத்துக்கு அப்புறம்... பூரி கட்டை எங்கு இருக்குன்னு மட்டும் சந்தேகக் கண்ணோட பாருங்க... மத்தத பார்தீங்க... தொலைஞ்சீங்க

இராகவன் நைஜிரியா said...

// இப்படி இன்னும் ஏதோதோ விருப்பங்கள் காலத்திற்கும் மாறிக்கொண்டே இருந்தது. //

மாற்றம் என்ற சொல்லத்தவிர மற்றவை மாறக்கூடியதுதாங்க

இளமுருகன் said...

ஹா..ஹா..ஹா...சூப்பர் ராகவன் சார்

புலவன் புலிகேசி said...

கொஞ்சம் கஷ்டம்தாங்க

பனித்துளி சங்கர் said...

புதிய பதிவிற்காக காத்திருக்கிறேன்

பனித்துளி சங்கர் said...

அருமையான புனைவு வாழ்த்துக்கள் !

Sethuraman said...

All are fantastic blogs from ilamurugan.

I know Ilamurugan from 2002 ! he thinks different ... and all here !

Well done and Keep Go ilamurugi !

மாயன் said...

இளமுருகன்... நிறைய விஷயம் இருக்கு உங்க கிட்ட... இன்னும் அடிச்சு ஆடுங்க..

cheena (சீனா) said...

அன்பின் இளமுருகன் - அவனா இவன் - அருமையான பதிவு - விருப்பங்கள் எளிதில் நிறைவேறாது - நிறைவேற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

வரிகள் வாசிக்கும் தருணம் கண்கள் காட்சிப்படுத்த தவறுவதில்லை. எத்தனை எத்தனை கனாகள் அதில் எத்தனை ஏணி போட்டு வாழ்க்கை பயணமதில் செல்கிறது.

Unknown said...

👌

Anonymous said...

அருமையான சின்ன சின்ன ஆசைகள் அழகு

Post a Comment

ஏதாவது சொல்லிட்டுப் போங்க சார்...

இன்றைய தலைப்பு செய்திகள்