வாங்க.. வாங்க... வாங்க....
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Friday, January 29, 2010

இன்றைய தமிழகம்

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் -எதற்காக இத்தனை கஷ்டப்படுகிராய்?
நான் கேட்டேன்-கஷ்டபடாமல் எப்படி வாழ்கையை ஓட்ட முடியும்?
அவர் சிரித்தபடி சொன்னார்-என்னை பார்
ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன்
போரடித்தால் வண்ணதொலைகாட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்,
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜ மரியாதையுடன் !
உழைக்காமல் எப்படி அப்பா இத்தனையும் முடியும்?
முதலாமவர் சிரித்தபடி கேட்டார் -நான் யார் தெரியுமா?
தமிழ் நாட்டு குடிமகன் 
என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய்
சமைப்பதற்கு கேசும் அடுப்பும் இலவசம்
பொழுதுபோக்கிற்கு வண்ண தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்
குடும்பத்துடன் உயிர்காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்
எதற்காக உழைக்க வேண்டும் ?
நான் கேட்டேன் -உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?
பலமாக சிரித்தபடி உரைத்தார்
மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 இலவசம் சிகிச்சையுடன்
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்
படிப்பு சீருடையுடன் மதிய உணவும் இலவசம் முட்டையுடன்
பாடப்புத்தகம் இலவசம் ,படிப்பும் இலவசம் ,பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்
தேவை என்றால் சைக்கிளும் இலவசம்
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை ருபாய் 25000 இலவசம்    ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்
தேவை என்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்
மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்கையிலும்
நான் எதற்கு உழைக்க வேண்டும் !?
வியந்து போனேன் நான் !!!
(நண்பர் மெயில்லில் அனுப்பிய செய்தி இது,அவருக்கு நன்றி)

இளமுருகன்
நைஜீரியா
29.01.10  5.53 a. m.

Wednesday, January 27, 2010

திருவிளையாடல்-திரைவிமர்சனம்

நீங்கள் ஏன் உங்கள் வலைப்பதிவில் இதுவரை திரைவிமர்சனமே எழுதவில்லை என்ற வாசகர்களின்(?) அன்பான வேண்டுகோளை ஏற்று நாமும் திரைவிமர்சனம் எழுதலாமே என்று அமர்ந்த போது 'எந்த படத்திற்கு எழுதுவது ?'என்ற கேள்வி எழுந்தது.நான் இருப்பது நைஜீரியா என்பதாலும் திருட்டு VCD பார்ப்பதில்லை (கிடைக்காததால்)என்ற கொள்கையாலும் சமீபத்தில் எந்த புது  படமும் பார்க்காததால் சரி ''திருவிளையாடல்'' படத்திற்கு விமர்சனம் எழுதலாமே என  தீர்மானித்தேன்.
இனி விமர்சனம் :
படம் ஒரு பழத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கிறது.'பழம்' பெறாத முருகனை சாந்தப்படுத்த சொல்லப்படும் கதையாக படம் நகர்த்தப்படுகிறது.அனைவருமே 'பழம்'பெரும் நடிகர்,நடிகைகள் என்பதால் நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருகிறார்கள்.சிவாஜி கணேசனை தவிர வேறு யாராவது இதில் நடித்திருந்தால்...சிவனுக்கு இவ்வளவு புகழ் வந்திருக்குமா என்பது சந்தேகமே.

தருமி-சிவன் 'கேள்வி-பதில்'காட்சியில் சிவாஜியையே நாகேஷ் தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.இந்த உண்மையான கோபத்தால் தான் பாண்டிய சபையில் நக்கீரரை  'அவன் இவன்'என சிவாஜி  பேசி நக்கீரரை நெற்றிக்கண்ணால் 'கொலை'செய்து விடுகிறார்.

ஹேமநாத பாகவதரை பாடியே துரத்தி அடிப்பது (no fight) புது யுக்தி.படத்தில் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்த போதும் ஒரு பாடல் கூட re-mix ஸ்டைலில் இல்லாமல் அனைத்து பாடல் வரிகளும் ஈஸி யாக புரிந்துபோவது ஒரு குறையாகத்தான் தெரிகிறது.

தாட்சாயணி கணவனை (சிவன்) எதிர்த்து பேசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் போது பாரதிராஜா கண்ட 'புதுமை பெண்ணாய்' மிளிர்கிறார்.இந்த சீன்களில் பெண்கள் பக்கம் விசிலும் கைதட்டலும் தூள்பறக்கிறது.

பழதிற்காக 'புசுக்' கென கோபம் கொள்ளும் முருகன் ஔவை பலமுறை 'நீ ஒரு பழம் அதுவும் ஞானப்பழம் ' என பாடும்போது 'யாரைப்பார்த்து பழம் என்கிறாய்'என முருகனுக்கு கோபம் வராதது லாஜிக் காக இடிக்கிறது.

இப்படி படத்தின் கருவான பழத்திற்கு இயக்குனர் முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை.காட்சிகளில் ஒரு சிறிய பழமே காட்டப்படுகிறது.அதை ஞானப்பழம் என்பதை நம்பமுடியவில்லை.

இன்றைய நம் சட்டசபையில் பேசுவது போல மாமன்னர் பாண்டியன் அவையிலும் 'அவன் இவன்'என்ற ஏகவசனங்கள் இடம் பெற்றுதான் இருகின்றன.இந்த வரலாறு தெரிந்துதான் நம் MLAகள் இன்று சட்டசபையில்நடந்து கொள்கிறார்கள்  என்ற கூடுதல் தகவலும் கிடைகிறது.

ஆக மொத்தம் அருமையான கைலாய செட் அமைப்புகள்,புரியும்படியான பாடல்கள்,மந்திர தந்திர காட்சிகள் என படம் குடும்பத்தோடு பார்க்கும் படியாகவே உள்ளது.

படம் முடிந்து வெளியே வரும்போது ''ஞானபழத்திற்கு கொட்டை உண்டாப்பா?''என்று என் மகன் கேட்ட கேள்விக்குத்தான் இன்றுவரை எனக்கு பதில் தெரியவில்லை.உங்களுக்கு...?
இளமுருகன்
நைஜீரியா
27.01.10   11.00 a.m.

இன்றைய தலைப்பு செய்திகள்